“தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது.” (II நாளாகமம் 16:9)
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், திருடாமலோ, பொய் சொல்லாமலோ, விபச்சாரம் செய்யாமல் இருப்பதாலோ, விக்கிரக ஆராதனை செய்யாமலிருப்பதிலோ எந்த பயனுமில்லை. உங்கள் சொந்த நீதியின் பின்னால் ஒளிந்து கொள்வதில் எந்த பயனுமில்லை.
ஏனென்றால், ஒரு நபர் எல்லாவற்றிலும் ஒரு நீதியான வாழ்க்கையை வாழ்ந்தாலும், அவருக்குள் ஏதோ ஒன்று அல்லது யாரோ ஒருவர் கர்த்தராகிய இயேசுவின் இடத்தை எடுத்துக்கொண்டால், அவர் பரிசுத்த ஆவியைப் பெற வழியில்லை, அது சாத்தியமுமில்லை.
ஒருவரின் இருதயத்தை கர்த்தருக்கென்று முழுமையாக வைத்திருப்பது தான் புத்தியுள்ள விசுவாசத்தின் தேவை.
எனவே, நமக்குள் ஒரு இடத்திற்காக ஆண்டவர் இயேசுவோடு எதையும் அல்லது யாரையும் போட்டியிட நாம் அனுமதிக்க கூடாது!
அவர் நமக்குள் முழுமையாக ஆட்சி செய்ய வேண்டும்! ஏனென்றால், பரிசுத்த ஆவியானது, அவர் ஒரு நபரின் மாபெரும் குறிக்கோளாக இருக்கும்போது ஊற்றப்படுவதில்லை, ஆனால் அவர் அவர்களின் ஒரே குறிக்கோளாக இருக்கும்போது மட்டுமே!
நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் வரை, அவருக்கும் வேறு எதற்கும் இடையில் நீங்கள் பிரிந்திருக்கக் கூடாது!
Link in English: the only goal
பிஷப் கியாரசி சாண்டோஸ்